Monthly Archives: December 2014

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முன்னதாக நாம் ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனத்தின் பெருமைகளையும் வழிமுறைகளையும் https://srivaishnavagranthamstamil.wordpress.com/2013/12/13/srivaishnava-thiruvaaraadhanam/ என்கிற கட்டுரையில் கண்டுள்ளோம். அந்தக் கட்டுரையில் பல ச்லோகங்களும் பாசுரங்களும் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. அங்கு விடுபட்ட விஷயங்களைக் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் முக்கியக் குறிக்கோள். திருவாராதனத்தில் உபயோகப்படுத்தப்படும் ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களைத் தொடுத்து அளிக்க எங்களால் ஆன முயற்சியை எடுத்துள்ளோம். முழு விவரங்களுக்கு மேலே படிக்கவும்.

ebook: https://onedrive.live.com/redir?resid=32ECDEC5E2737323!143&authkey=!AAS1WeJFYJguuT0&ithint=file%2cpdf

ஸ்ரீமந் நாராயணன் – பரமபதம்
 
திருவாராதனம் (கோயில் ஆழ்வார் – ஸந்நிதி)
நம்மாழ்வார், எம்பெருமானார், மாமுனிகள்

குறிப்புகள்:
ரஹஸ்ய த்ரயம் முதலியன பஞ்ச ஸம்ஸ்காரத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.
வேத மந்திரங்கள் உபநயந ஸம்ஸ்காரத்தில் செய்யப்படும் ப்ரஹ்மோபதேசத்துக்குப் பின்பே சொல்லப்படலாம்.

ஊர்த்வ புண்ட்ர தாரணம்

தீர்த்தமாடிய பிறகு, சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொன்னபடி திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். 12 திருமண்களும் அதைத் தொடர்ந்து 12 ஸ்ரீசூர்ணங்களும் கீழே காட்டப்பட்ட இடங்களில் இட்டுக் கொள்ள வேண்டும்.

எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

  1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
  2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
  3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
  4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
  5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
  6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
  7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
  8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
  9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
  10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
  11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

குறிப்புகள்:

  • ஊர்த்வ புண்ட்ரம், தரையில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே இட்டுக்கொள்ள வேண்டும்.
  • கையில் மீதம் உள்ள திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணத்தை தீர்த்தம் கொண்டு கழுவுதல் கூடாது. மீதம் உள்ளதை தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.
  • திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் ஆள்காட்டி விரலாலேயே இட்டுக் கொள்ள வேண்டும். உபகரணங்கள் உபயோகப்படுத்துதல் கூடாது.
  • இறப்புத் தீட்டு காலங்களில், திருமண் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளக் கூடாது. பெரியோரிடம் கேட்டு அறிந்து குடும்ப வழக்கப்படி பின்பற்றவும்.

குரு பரம்பரா த்யானம்

ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொண்ட பின், குரு பரம்பரையை மந்திரமாகவும் (எளிதில் நினைவில் கொள்ளத்தக்க) ச்லோகமாகவும் அநுஸந்திக்க வேண்டும். இரண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

ச்லோக குருபரம்பரை (ச்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

ரஹஸ்ய த்ரய அநுஸந்தாநம்

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.

திருமந்திரம்ஓம் நமோ நாராயணாய

த்வயம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

சரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் (https://guruparamparai.wordpress.com/thanians/)

  • பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந:

  • பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

  • ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||

  • நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

  • ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||

  • உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||

  • மணக்கால்நம்பி (மாசி – மகம்)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||

  • ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

  • பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

  • எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

  • எம்பார் (தை – புனர்பூசம்)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||

  • பட்டர் (வைகாசி – அனுஷம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

  • நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||

  • நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

  • வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

  • பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

  • திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||

  • மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

  • பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) – வானமாலை மடம் சிஷ்யர்களுக்கு

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே

இதன் பிறகு, தன்னுடைய ஆசார்யன் மடம்/திருமாளிகை பரம்பரை தனியன்களை அநுஸந்திக்க வேண்டும்.

பிறகு ஸந்த்யாவந்தநம் மற்றும் மாத்யாஹ்நிகம் செய்ய வேண்டும். திருவாராதனம் மதிய வேளையில் மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும்.

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ச்லோகமும்

குறிப்பு: காலை அனுஷ்டாநங்களுக்கும் திருவாராதனம் தொடங்கும் சமயத்துக்கும் நடுவில் அசுத்தி நேர வாய்ப்புள்ளதால் இது அவச்யம்.

புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

என்று கூறி, மேல் வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

ஆபோ ஹிஷ்டா மயோபுவ: |
தா ந ஊர்ஜே ததாதந: |
மஹே ரணாய சக்ஷஸே |
யோவச் சிவதமோ ரஸ: |
தஸ்ய பாஜயதேஹ ந: |
உசதீரிவ மாதர: |
தஸ்மா அரங்கமாம வ: |
யஸ்ய க்ஷயாய ஜிந்வத |
ஆபோ ஜநயதா ச |

திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்
துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

குறிப்பு: திருத்துழாய் எல்லா நாட்களிலும் பறிக்கக் கூடாது – சில கட்டுப்பாடுகள் உள்ளன.

பொதுத் தனியன்கள் (http://divyaprabandham.koyil.org/?page_id=11)

கோயிலாழ்வார் முன்பு வட்டில்கள் முதலியவை அடுக்கி வைக்கும் பொழுது சேவிக்கவேண்டும்.

  • மணவாளமாமுனிகள் தனியன் அழகிய மணவாளன் அருளிச் செய்தது

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

  • பொன்னடிக்கால் ஜீயர் தனியன் – தொட்டையங்கார் அப்பை அருளிச்செய்தது (வானமாமலை மடம் சிஷ்யர்களுக்கு)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே

  • குருபரம்பரை தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

  • எம்பெருமானார் தனியன் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச் செய்தது

யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

  • நம்மாழ்வார் தனியன் ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தது

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

  • நம்மாழ்வார் உடையவர் தனியன் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

குறிப்பு: இது முதல், திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் அவ்வபொழுது சேவிக்க நேரும். அநத்யயந காலத்தில், திவ்ய ப்ரபந்த பாசுரங்களுக்கு பதில் உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவிக்கவும்.

ஸந்நிதி முன்பு விளக்கேற்றும்பொழுது சேவிக்கவ வேண்டிய பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி 1)

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி 1)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தாதி 1)

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்

ஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)

தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ
உத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா
 நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 16)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 23)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 24)

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)

மூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)

முந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)

மந்த்ராஸநம் செய்யவும்

ஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.

அலங்காராஸநம் ஆரம்பிக்கவும்.

முதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

தூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
பரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று
உரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)

தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)

வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பனிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)

அர்ச்சனை (திருத்துழாய் மற்றும் புஷ்பங்களைக் கொண்டு செய்யவும்):

ஓம் கேசவாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் வாமநாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் தாமோதராய நம:

ஓம் ச்ரியை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் சந்த்ரஸோதர்யை நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் ஹரி வல்லபாயை நம:
ஓம் ஸார்ங்கிண்யை நம:
ஓம் தேவ தேவ்யை நம:
ஓம் லோகஸுந்தர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

இதற்குப் பிறகு, பொதுத் தனியன்கள் தொடக்கமாக கால அவகாசத்துக்கு ஏற்றார்ப்போல் ஸேவாகாலம் (பாசுரங்கள்) சேவிக்கவும்.

போஜ்யாஸனம்
போகம் (உணவு) தயார் செய்து பெருமாள், தாயார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசர்யார்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

சாற்றுமுறை சேவிக்கவும்:

  • எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், மாமுனிகள் மற்றுமுண்டான ஆசார்யர்களின் மங்கள ச்லோகங்கள் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/mangala-slokams/
  • சாற்றுமுறை பாசுரங்கள் சேவிக்கவும்.
  • செய்ய தாமரைத்த் தாளிணை வாழியே… (மாமுனிகள் வாழி திருநாமம்) சேவிக்கவும்.
  • திருவிருந்த மலர்த் தாள்கள் வாழியே… (பொன்னடிக்கால் ஜீயர் வாழி திருநாமம்) சேவிக்கவும் – வானமமாலை மடம் சிஷ்யர்களுக்கு.
  • அந்த நாளில் திருநக்ஷத்திரம் கொண்டருளும் ஆழ்வார் ஆசார்யர்கள் வாழி திருநாமம் சேவிக்கவும். மேலும் விவரங்கள்: https://guruparamparai.wordpress.com/vazhi-thirunamams/

பர்யங்காஸனம்

இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)

ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:
உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு
ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
அடியேன் வேங்கடேஷ் ராமானுஜ தாஸன்

மூலம்: விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் அருளிய ஜீயர் படி, காஞ்சீபுரம் ப்ர. ப. அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் நித்யானுஷ்டான பத்ததி, http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html

archived in https://srivaishnavagranthamstamil.wordpress.com/,

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) –http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – https://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org