Monthly Archives: May 2023

அநத்யயன காலம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யானுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஓத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஓதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் . மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல. த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது. த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.

அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் தொடங்கப்படும். பொதுவாக, கோயில்களில் அத்யயன உத்ஸவத்துக்கு அடுத்த நாள் முடிந்து விடும். இல்லங்களில் தை ஹஸ்தம் அன்று மீண்டும் பாசுரங்களைத் தொடங்குவது என்ற க்ரமத்தைப் பொதுவாகப் பலரும் கடைபிடிக்கிறார்கள்.

முதன் முதலில் இந்த அத்யயன உத்ஸவத்தை நம்மாழ்வார் பரமபதம் அடைவதைக் கொண்டாடும் வகையில் திருமங்கை ஆழ்வார் திருவாய்மொழி ஸேவாகாலத்துடன் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி ஸமயத்தில் நடத்தினார். ஸ்ரீமந் நாதமுனிகள் அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையும் ஸேவிப்பதைத் தொடங்கினார். எம்பெருமானார் இது எல்லா திவ்யதேசங்களிலும் கொண்டாடப்படும்படிச் செய்தார். பிற்பட்ட ஆசார்யர்கள் இதைச் சிறந்த முறையில் நடத்தும்படிச் செய்தனர்..

அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?

சில உபயோகமான குறிப்புகள்:

  • பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில்,
    திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கப்படும்.
  • மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.
  • கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
  • க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை (மார்கழி மாதத்தில் கோயில்களைப் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).
  • கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது),ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம் (இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும். கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.
  • திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை
    சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக்கொள்ளவும்.
  • பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.
  • பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும். தொடர்ந்து “ஸர்வ தேச தசா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.
  • பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம். மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
  • ரஹஸ்ய க்ரந்தங்களைக் கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆழ்வார்கள்  / ஆசார்யர்கள்  திருநக்ஷத்ரங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம்.

சித்திரை

  • அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி )
  • கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் )
  • ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் )
  • திருவாதிரை
    • ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்)
    • ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்)
  • புனர்பூசம் – தாசரதி (முதலியாண்டான் )
  • ஆயில்யம் – பாலதந்வி (கோயில் கொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான் )
  • ஹஸ்தம் – ப்ரணதார்த்திஹரர் (கிடாம்பி ஆச்சான் )
  • சித்திரை
    • மதுரகவி ஆழ்வார்
    • அனந்தார்யர் (அனந்தாழ்வான் )
    • வாத்ஸ்ய வரதாசார்யர் (நடாதூர் அம்மாள்)
  • திருவோணம் (ஶ்ரவணம் ) – லோகார்ய முனி (பிள்ளை லோகம் ஜீயர் )

வைகாசி

  • ரோஹிணி – கோஷ்டி பூர்ணர் (திருக்கோஷ்டியூர் நம்பி )
  • ஸ்வாதி – ஸ்ரீசைல பூர்ணர் (பெரிய திருமலை நம்பி)
  • விசாகம்
    • ஸ்ரீ சடகோபர் (நம்மாழ்வார்)
    • ஸ்ரீசைலேசர் (திருவாய்மொழிப் பிள்ளை)
  • அனுஷம்
    • பராசர பட்டர்
    • வேத வ்யாஸ பட்டர்
  • கேட்டை – திருவரங்கப்பெருமாள் அரையர்

ஆனி

  • ஆயில்யம் – மாறனேரி நம்பி
  • ஸ்வாதி
    • விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்)
    • ஸ்ரீ கிருஷ்ண பாதர் (வடக்குத் திருவீதிப் பிள்ளை)
    • சுந்தராஜமாத்ரு முனி (வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்)
  • அனுஷம் – நாதமுனிகள்
  • ஸ்ரவணம் ( திருவோணம் )- திருக்கண்ணமங்கை ஆண்டான்
  • அவிட்டம் – திருமழிசை அண்ணவப்பங்கார்

ஆடி

  • பூசம் – வாதி பீகர குரு (பிரதிவாதி பயங்கரம் அண்ணன் )
  • பூரம் – கோதை (ஆண்டாள்)
  • உத்ராடம் – யாமுனாசார்யர் (ஆளவந்தார்)

ஆவணி

  • ரோஹிணி
  • ஸ்ரீமன் நாராயணன் (பெரிய பெருமாள் )
  • பெரியவாச்சான் பிள்ளை
  • நாயனாராச்சான் பிள்ளை
  • அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்
  • ஹஸ்தம் – வரதாசார்யர் (அப்பாச்சியாரண்ணா)

புரட்டாசி (கன்னி)

  • புனர்பூசம் – வானமாமலை/தோதாத்ரி பொன்னடிக்கால் ஜீயர்
  • மகம்- ஸ்ரீனிவாச குரு (கோயில் கந்தாடை அப்பன்)
  • பூரட்டாதி – வரத நாராயணாசார்யார் (கோயில் கந்தாடை அண்ணன்)
  • திருவோணம் (ஶ்ரவணம் ) – வேதாந்தாசார்யர்

ஐப்பசி

  • திருவாதிரை – கூரகுலோத்தம தாசர்
  • பூசம் (புஷ்யம்)- ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்
  • திருமூலம் – ஸ்ரீ வரவரமுனி (அழகிய மணவாள மாமுனிகள் )
  • பூராடம்
  • விஷ்வக்சேனர் (சேனை முதலியார்)
  • குருகேசர் (திருக்குருகைப்பிரான் பிள்ளான்)
  • திருநாராயணபுரத்து ஆயி  ஜநந்யாசார்யர்
  • திருவோணம் (ஶ்ரவணம் )
  • ஸரோ யோகி (பொய்கை ஆழ்வார்)
  • பிள்ளை லோகாசார்யர்
  • அவிட்டம்
  • பூத யோகி (பூதத்தாழ்வார்)
  • மத்ய வீதி பட்டர் (நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்)
  • சதயம்
  • மஹதாஹ்வயர் (பேயாழ்வார்)
  • பஶ்சாத் சுந்தர தேசிகர் ( பின்பழகிய பெருமாள் ஜீயர்)
  • உத்ரட்டாதி – நாராயணர் (விளாஞ்சோலை
    பிள்ளை)
  • ரேவதி – தேவராஜ குரு (எறும்பி அப்பா)

கார்த்திகை

  • பரணி
  • தேவராஜ முனி (அருளாளப்பெருமாள் எம்பெருமானார்)
  • மாதவாசார்யர் (ஈயுண்ணி மாதவப் பெருமாள்)
  • கார்த்திகை
  • ஸ்ரீ பரகாலன் (திருமங்கை ஆழ்வார்)
  • ஸ்ரீ கலிவைரி  தாஸர் (நம்பிள்ளை )
  • ரோஹிணி – முனிவாஹன யோகி (திருப்பாணாழ்வார்)
  • புனர்பூசம் – பட்டநாத முனி (பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் )

மார்கழி

  • பரணி – தேவராஜாசார்யார் (நாலூராச்சான் பிள்ளை )
  • கேட்டை
  • பக்தாங்ரிரேணு (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
  • ஸ்ரீ மஹா பூர்ணர் (பெரிய நம்பி )
  • கூர நாராயண ஜீயர்
  • அவிட்டம் – ரம்யஜாமாத்ரு தேவர் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் )

தை

  • புனர்பூசம் – ஸ்ரீ கோவிந்தாசார்யார் (எம்பார்)
  • மகம் – பக்திஸார யோகி (திருமழிசை ஆழ்வார் )
  • ஹஸ்தம் – கூரேசர் (கூரத்தாழ்வான் )
  • விசாகம் – குருகைக் காவலப்பன்

மாசி

  • ம்ருகசீர்ஷம் – காஞ்சி பூர்ணர் (திருக்கச்சி நம்பி )
  • ஆயில்யம் – தனுர் தாஸர் (பிள்ளை உறங்காவில்லி தாஸர் )
  • மகம்
  • ஸ்ரீ ராம மிச்ரர் (மணக்கால் நம்பி )
  • மாலாதாரர் (திருமாலை ஆண்டான்)
  • புனர்பூசம் – குலசேகராழ்வார்

பங்குனி

  • ரோஹிணி – ஸ்ரீமன் நாராயணன் (பெரிய
    பெருமாள் )
  • உத்ரம்
  • ஸ்ரீ மஹாலக்ஷ்மி (பெரிய பிராட்டி )
  • ஸ்ரீ வேதாந்தி ஜீயர் (நஞ்சீயர் )
  • ஹஸ்தம் – ரங்கநாத குரு (திருவரங்கத்தமுதனார் )

மாதம் தெரியவில்லை 

  • பூசம் (புஷ்யம் )- கோலவராஹார்யர் (நாலூர் பிள்ளை )
  • ஸ்வாதி – பத்மநாபாசார்யர் (ஈயுண்ணி பத்மநாபப்பெருமாள் )

மாதம் மற்றும் திருநக்ஷத்ரம்  தெரியவில்லை 

  • வங்கி புரத்து நம்பி
  • ஶ்ருத ப்ரகாசிகா பட்டர் (சுதர்சன சூரி )
  • ப்ரணதார்த்திஹர குரு(அப்பிள்ளை )
  • ராமானுஜ குரு (அப்பிள்ளார் )

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org